ஜென் கதைகள்: ஜாடிக்குள் வாத்து

ஒரு சமயம் பெரிய பதவியில் இருந்த அதிகாரி லூ கென், சா'ன் ஆசிரியர் நான் சூவானைச் சந்திப்பதற்காக சென்றான். ஆசிரியரைப் பார்த்ததும் லூ கென், "முன்னொரு காலத்தில் தவத்தில் சிறந்து வாழ்ந்த ஒருவர் வாத்து குஞ்சு ஒன்றினை ஜாடிக்குள் வளர்த்தார். அந்த குஞ்சும் நன்றாக வளர்ந்து பெரிதானது. ஆனால் பெரிதாக வளர்ந்த வாத்தினை அவரால் ஜாடிக்குளிருந்து எப்படி வெளியே எடுப்பது என்று தெரியவில்லை" என்று கூறி நிறுத்திவிட்டு, ஆசிரியரை நோக்கி புன்முறுவலுடன் "ஜாடியினை உடைக்காமலும், வாத்திற்கு காயம் படாமலும் எப்படி வாத்தினை ஜாடிக்குள்ளிருந்து வெளியே வரவழைப்பது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

"ஓ! தலைவரே!" என்று கூறிய ஆசிரியர் நான் சூவான் திடிரென்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டார்.
அதனைப் பார்த்த லூ கென் "இங்கே இருக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே கொஞ்சமும் தாமதிக்காமல் துள்ளி குதித்தார்.
துள்ளிக் குதித்த லூ கென்னை ஆச்சரியத்துடன் பார்த்து "நல்லது, வெளியே எடுத்தாகி விட்டது" என்றார் ஆசிரியர் நான் சூவான்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts