இசுன் புறப்பாடு - ஜென் கதை

இசுன் ‘ ஒரு பெண் துறவி.
அறுபது ஆண்டுகள் நிறைந்த பின், மடாலயத்தின் முன்னால்
விறகுக் கட்டைகளை அடுக்கி தீமூட்டச் சொன்னாள். மற்ற
துறவிகளிடம்.
அவ்வாறே செய்யப்பட்டது.
இசுன் அதன் நடுவில் போய் அமர்ந்து கொண்டாள்.!
‘ஐயோ ! இது என்ன ? தீ உங்களைப் பற்றிக் கொண்டதே
சுடுமே ! ‘ என்று கத்தினார்கள் எல்லோரும்.
“ முட்டாள்தனமாய் உளறாதீர்கள் “ என்று சொல்லிவிட்டு
நெருப்பானாள் இசுன்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts