தவளைக்கறி

சைனாவின் கிராமத்தில் இருந்த ஒரு விவசாயி, பக்கத்திலிருந்த நகரத்திலிருந்த ஒரு சிற்றுண்டி உணவகத்திற்கு சென்று அந்த உணவகத்தின் உரிமையாளரை சந்தித்தான். அந்த ஒட்டல் உரிமையாளரிடம் "இலட்சம் தவக்களையின் கால்கள் வேண்டுமா?" என்றுக் கேட்டான். உரிமையாளர் அந்த விவசாயியைப் பார்த்து வியந்து "இலட்சம் தவளையின் கால்கள் உனக்கு எப்படி கிடைக்கும்?" என்றுக் கேட்டான்.

விவசாயி ஒட்டல் உரிமையாரிடம், "என்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள குட்டை நிறைய தவக்களைகள் உள்ளன. இலட்சக் கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். இரவு முழுவதும் அந்த தவளைகளின் கத்தும் சத்தம் காதைப் பிளக்கிறது. அதணால் அங்கிருந்து பிடித்துக் கொண்டு வந்து தருகிறேன்" என்றான்.

உரிமையாளர் "ஓ! அப்படியா சேதி, அடுத்த வாரத்திலிருந்து தினம் 100 தவளைகள் வீதம் வாரத்திற்கு 700 தவளைகளை பிடித்துக் கொண்டு வந்து தா, அதற்கு தகுந்த பணம் உனக்கு கொடுக்கப் படும். ஒரு மாதம் கழித்து 200 தவளைகள் வீதம் பிடித்துக் கொண்டு வருவதற்கும் இப்பொழுதே ஒப்பந்தம் போடுகிறேன்" என்று கூறி விவசாயியிடம் ஒப்பந்தம் செய்து கொண்டான்.

அடுத்த வாரம் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு அசட்டுப் புன்னகையுடன் வந்த விவசாயி ஒட்டல் உரிமையாரிடம் இரண்டு குட்டி தவக்களைகளை காண்பித்தான். சிற்றுண்டி உரிமையாளர் விவசாயியைப் பார்த்து "ஆமாம், எங்கே மற்ற தவளைகள், இரண்டே இரண்டை மட்டும் என்னிடம் காட்டுகிறாய்" என்றார். விவசாயி அசட்டு புன்னகையுடன் "ஒரு பெரிய தவறு நிகழ்ந்து விட்டது. அந்தக் குட்டையில் இந்த இரண்டு தவளைகள் மட்டுமே இருந்தன. ஆனால் இவை போட்ட சத்தம் ஊருக்கே கேட்கும் அளவிற்கு இருந்தது" என்றான்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts