ஜென் கதைகள்: விடை உன் கையில்!



ஒரு இளைஞன் ஒரு சிறிய பறவையைப் பிடித்துத் தன் உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு ஜென் மாஸ்டரிடம் வந்தான்.
"மாஸ்டர்! என் கையில் உள்ள பறவை உயிருடன் இருக்கிறதா, அல்லது இறந்து விட்டதா? நீங்கள்தான் அனைத்தும் அறிந்தவர் ஆயிற்றே, பதில் கூறுங்கள்" என்றான்.

பறவை உயிருடன் இருக்கிறது என்று மாஸ்டர் கூறினால் அதை உள்ளங்கையில் அமுக்கிக் கொன்று விடலாம். அவர் இறந்து விட்டது என்று சொன்னால், "நீங்கள் சொல்வது தவறு! இதோ உயிருடன் இருக்கிறது" என்று காண்பிக்கலாம் என்பது அவன் திட்டம். எல்லாம் உணர்ந்த மாஸ்டருக்கா இது தெரியாது?

அவர் மிருதுவான குரலில், "விடை உன் கையில் இருக்கிறது" என்றார்!

நீருடன் என்னைப் பொருந்தச் செய்து கொண்டேன்!

ஒரு வயதான மனிதன் வேகமாகப் பாய்ந்தோடும் வெள்ள நீரில் விழுந்து விட்டான். அந்த வெள்ளம் அருவி ஒன்றை நோக்கிப் பாய்ந்து சென்றது. இதைப் பார்த்த அனைவரும் அலறினர். அவர் பிழைப்பது துர்லபம் என்றே அனைவரும் நினைத்தார்கள். ஆனால், ஒரு பெரும் அற்புதம் போல அவர் உயிர் பிழைத்து அருவியின் அடியிலிருந்து வந்தார். அவரைச் சூழ்ந்து கொண்ட அனைவரும், "எப்படித் தப்பினீர்கள்?" என்று ஆச்சரியத்துடன் வினவினர்.

அதற்கு அவர், "நான் நீருடன் என்னைப் பொருந்தச் செய்து கொண்டேன். நீரை எனக்குப் பொருந்தும்படி ஆக்கிக் கொள்ள முயலவில்லை. சற்றுக் கூட யோசிக்காமல் நீரை என்னை உரிய முறையில் உருவாக்கம் செய்யும்படி விட்டு விட்டேன். சுழலுள் சிக்கிய நான், சுழலிடமிருந்தே வெளிவந்தேன். இதுதான் நான் பிழைத்த கதை" என்றார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts